thendral saravanan

Sunday, August 1, 2010

மழை


வானளாவிய மரங்கள்
பலமாடிக் கட்டிடங்கள்
குளிப்பாட்ட ஆளில்லை -நீ வருவாயா?


வண்ண வண்ண மலர்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
விளையாட -நீ வருவாயா?


மண் வளம் பெற
மனிதன் நலம் பெற
மறக்காமல் -நீ வருவாயா?


கண்மணிகள் விளையாட
கவிஞர்கள் கவிபாடச்
சளைக்காமல் -நீ வருவாயா?


முத்து முத்தாய் உன் அழகு
முகிழ்ந்திடக் கூடும் மனது
முத்தமிட வான் மழையே -நீ வருவாயா?


காத்திருக்கும் விவசாயி
கலங்கடிக்கும் அவன் நிலைமை
கண்சிமிட்டும் நேரத்தில் -நீ வருவாயா?


ஆறு குளம் நிறைந்திடவே
ஊரு கண்மாய் பொங்கிடவே
காடுவளம் காணவே -நீ வருவாயா?
                                     - தென்றல்.



No comments: