thendral saravanan

Saturday, August 14, 2010

ஆங்கிலம் பயில்

தமிழைப் போற்றும் என் தந்தை புதிய மொழி கற்க தடையாய் 
இருந்ததில்லை.


அன்பில் விளைந்த தென்றலுக்கு,


வாழ்த்துக்கள்.


நிறையவே படி.நிறையப் பேசு.அன்புடன் பழகு .
எதிலும் எச்சரிக்கை,கவனம் காட்டு.அச்சம் தவிர்.
இப்படி உனக்கு அறிவுரைகள் கூறுவதை விட
'நிலைமை 'அறிந்து புரிந்து முன்னேறுக.


உன் மன எழுச்சிகளை அஞ்சாமல் எழுது.
நீ இன்று விவரம் அறிந்தவள்.விவரம் அரிய ஆர்வம் உடையவள்!

தமிழில் சிந்தி-பிறகு ஆங்கிலத்தில் எழுது...பிறகு ..தமிழை மற.
ஆங்கிலத்திலேயே சிந்திக்க வரும்.இப்படி ஒரு புதிய மொழியைக்கற்கவும்!
எனவே ஆங்கிலம் தன்வயப்படும் வரை தொடர்க. முயல்க!


உன் ஆங்கில அறிவு தமிழ் மக்கள் பயனுற வளர்தல் வேண்டும்.
உலக இலக்கியம் யாவும் உவந்து பயில்-கல்வியியல் அதற்கு உறுதுணைப் பாடமாக அமையும் என  நம்புகிறேன்.


தலைமை கொள் -கல்வியில் வாழ்வில்
கலை பயில் தெளிவில்
தலைமை கொள்...


அன்பாலும் உண்மையாலும் உலகை வெல்ல 
அறிவு முயற்சி மேற்கொள்!
யாதானும் நாடாம் ; ஊராம்...
எனவே கல்.


வாழ்க்கைக் கல்வி என்னும் 
உண்மை அறிந்து நட. 

                                                                   -அம்மா அப்பா 

No comments: