thendral saravanan

Saturday, August 7, 2010

சுற்றுலா






சின்னச் சிரிப்பும் ,சிந்திக்கவைக்கும் பேச்சும்,துள்ளல் நடையும் ,துடிப்பான செயலும் ,கண்டாலே இன்பம் ,கவிதை பிறக்கும் .
மாணவர்கள் -மான் அவர்கள் நல்ல வாய்ப்பு -நல்வழி காட்ட ,நட்பு பாராட்ட நன்றி சொல்வேன்!
தென்திசை நோக்கி எங்கள் பயணம் மாட கோபுரங்கள் ஆளும் மதுரை மீனாட்சி ,பழமுதிர்ச் சோலை ,அழகர் கோயில் ,திருமலை நாயக்கர் மஹால்...
தெவிட்டாது ,கண் சிமிட்டாது -குறிப்பெடுத்து நின்றிருந்தனர் கண்மணிகள் .மல்லிகை மணம் மனசெல்லாம் நிறைத்து கன்னியாகுமரி நோக்கி மறுநாள் பயணம் .
காலைக்கதிரவன் கணக்காய் வருவது கண்டு குதித்து கும்மாளமிட்டனர் செல்லங்கள்.விவேகானந்தர் பாறை பார்த்து பரவசமாய் வணங்கி எழுந்தனர்.
விண்ணைத் தொட்ட வள்ளுவனைகும்பிட்டு மகிழ்ந்தனர்.இராமபக்தன் சுசிந்தரத்தில் கொண்டகோலம் கண்டபின் சென்றனர் முட்டம் நோக்கி .முட்டும் மூன்று கடல் சொல்லும் ரகசியத்தை கண்களால் படமெடுத்தனர் ;களிப்புற்றனர் .
அப்பப்பா ...எத்தனைகேள்விகள் வரலாற்று சிறப்பறிய ஆசைகள் பக்குவமாய் நான் கூறும் பதில் கேட்டு பரவசமாய் கேட்டனர் 'மீண்டும் வருவோமா?'                                                                -தென்றல்.   


2 comments:

G. KARTHIKEYAN said...

Good Work Teacher, Keep rocking..........

Best Wishes from
G.K.

Unknown said...

Neenda natkaluku pirahu oru nalla kavithai padiththa santhosam. Enn palli vazhkayai ninaivu paduththiathu. Mahizhchchi. Thodarattum.