thendral saravanan

Tuesday, August 3, 2010

பட்டாம்பூச்சியே


பட்டு பூக்கள் தானோ நீ பட்டாம்பூச்சியே
பல நிறங்கள் கொண்டாய் நீ பட்டாம்பூச்சியே


பச்சை புல் தரையும் பட்டாம்பூச்சியே
உன் வண்ணம் கண்டு வியக்குதம்மா பட்டாம்பூச்சியே


விந்தைகள் பல புரிந்தாய் பட்டாம்பூச்சியே
வித்தைகளை எங்கே கற்றாய் பட்டாம்பூச்சியே


சின்னஞ்சிறுவர் கையில் பட்டாம்பூச்சியே
சிக்காமல் சுற்றுகிறாய் பட்டாம்பூச்சியே


சித்திரம் போல் கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சியே
சிந்தையினில் நீ புகுந்தாய் பட்டாம்பூச்சியே
                                                                 -தென்றல்           

No comments: