thendral saravanan

Saturday, August 14, 2010

புத்தாண்டில்

01/01/91
அப்பா எழுதியது,


குழந்தைகளே,


காண அரிய ,காலம் போனது,
புதிய காலம் கையினில் சேர்ந்தது -


கையில் உள்ளதை மிக்க கவனமாய் 
மெல்ல விழிப்பாய்ச் செய்க ,செலவு !


புதிய பூக்களாய் நன்மை பொழிக!
புயலின் வேகமாய்ப் புன்மை சாடுக!


விதியைப் படைப்பவன் மாந்தனே -அந்த 
விதியை மாற்றிட வல்லவன் மாந்தனே !


எனவே, சோர்வுகள் வேண்டாம்;
சுறுசுறுப்பாய் வாழப் பழகுங்கள் .
விரும்பிய சிறந்த வாழ்க்கை அமையும்.
                        -அம்மா அப்பா .

No comments: