thendral saravanan

Saturday, August 14, 2010

என் தந்தையின் கடிதம்

கல்லூரியில் படிக்கும் போது குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட நான் ' செலவு அதிகம் ஆகுமே' என்று கவலைப்பட்ட பொழுது  ,அப்பாவின் கடிதம் உற்ச்சாகத்தை கொடுத்தது. எனக்கு என் தந்தை எழுதிய கடிதங்கள் கல்லூரியில் படிக்கும் போது மட்டுமல்ல இப்போதும் உற்சசாகத்தைக் கொடுப்பவை.


அன்புள்ள மகள் தென்றலுக்கு,
அம்மா அப்பா வாழ்த்துக்களுடன்,


அரிய பல நூல் கற்று நீ 
அடையும் பயன் ஆயிரமே 
ஆனாலும் என் மகளே ,விரியும் இந்த வானின் கீழ் 
விளங்கும் புவி மக்களை நீ 
விளங்கிக் கொள்ள
உதவும் இந்த 'செலவு ' போலச் 
சிறந்ததும் தான் வேறில்லை அறிவாய் நீ.
அதையெல்லாம் எழுதி வை.
எண்ணி வை;இலக்கியமாய்
விரியும் உன் பேர் கூறும் !


அன்பு மகளே,
தமிழன் பதித்த தடம் நீ போகும் 
தரையெல்லாம் காணலாம்-
இந்த உண்மை எண்ணி நீ,
நீ வைக்கும் மென் சீரடிக்குப் 
புதுப்பொருளைப் படைத்து வா.
தில்லிச் செலவைத்
தீரமுள்ளதாக்கி வா வாழ்க .





1 comment:

vinotha said...

Fathers are always special , missing my dad terribly